Recent Posts

Archives

Topics

Archive for June, 2009

“பாக்ய தேவதா” என்னும் இளையராஜா

Saturday, June 20th, 2009

ஒரு Time Machine இப்போது கிடைத்தால் 80களுக்குப் போகவேண்டும் என்று நினைத்துக் கொண்டே அதில் ஏறியிருப்பேன். அப்போது தானே இளையராஜாவின் அந்தப் பொற்காலத்தில் வந்த பாடல்களையும், படங்களையும் சம நேரத்தில் புதிதாய் அனுபவிப்பது போல அனுபவம் பெறலாம். அப்படி ஒரு Time Machine அனுபவங்கள் தான் மலையாளத்தின் சத்யன் அந்திக்காடுவின் படங்கள்.
இளையராஜா இல்லாது தனித்து வெற்றி பெற்ற ஒரு இயக்குனராக இருந்த இவர் பின்னர் ராஜாவோடு கைகோர்த்து மனசினக்கரே, அச்சுவிண்டே அம்மா, ரசதந்திரம் என்று தொடர்ந்து இசை […]

யாழ்.பாஷையூர் புனித அந்தோனியார் பெருவிழா ஒலி அஞ்சல்

Saturday, June 13th, 2009

இன்று ஈழத்தின் யாழ்மண்ணில் உறையும் பாஷையூர் புனித அந்தோனியார் ஆலயத்தின் பெருவிழா நேற்று சிறப்பாக நடைபெற்றிருந்தது. அதன் நேர்முக வர்ணனையை யாழ்மண்ணில் இருந்து தொலைபேசி வாயிலாக யாழ் திருமறைக்கலாமன்றத்தின் அண்ணாவியார் திரு.ஜெசிமன் சிங்கராயர் வழங்க நிகழ்ச்சியைச் சிறப்பானதொரு ஒலிப்படையலாகக் கொடுத்திருந்தார்கள் எமது 24 மணி நேர சமூக வானொலி அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள் திரு பிறின்ஸ் இமானுவேல் மற்றும் அவர் துணைவி திருமதி சோனா பிறின்ஸ் ஆகியோர்.

ஒலிஅஞ்சலைத் தொடர்ந்து கேட்க
பாகம் 1

தரவிறக்க (to […]

றேடியோஸ்புதிர் 41: இளையராஜா ஒதுக்கிய ஒளிப்பதிவாளர் படம்

Thursday, June 11th, 2009

அந்தப் பெரும் தயாரிப்பாளரிடம் வந்த ஒரு பெரும் ஒளிப்பதிவாளர் சக இயக்குனர் இவருடன் இணைந்து படம் பண்ண வேண்டும் என்று கேட்டபோது தயாரிப்பாளரும் சம்மதித்து அந்தப் படத்தில் பணிபுரிபவர்கள் பட்டியலைப் பார்க்கிறார். அதில் இசை இளையராஜா என்று போட்டிருக்கின்றது. தயாரிப்பாளருக்கோ மட்டற்ற மகிழ்ச்சி இளையராஜாவிடம் செல்கிறார். இளையராஜாவோ, “இந்த இயக்குனர் ஏற்கனவே எடுத்த படமொன்று பெட்டியில் கிடக்கிறது, இவரை வச்சா எடுக்கக் போறீங்க” என்று கேட்டு திணறிடிக்கிறார். ஆனாலும் ஒருவாறு ராஜாவைச் சம்மதிக்க வைத்துப் படம் வெளியாகின்றது.
இங்கே […]

அன்று இளையராஜா போட்ட மெட்டு; இன்றைய யுவனுக்கும் சேர்த்து

Sunday, June 7th, 2009

“யானை இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன்” என்பார்கள். தென்னிந்திய இசைச் சகாப்தத்தில் இசைஞானி இளையராஜாவின் இசைமரபினைப் பின்பற்றிய விழுதுகளாக அவரின் பாணியை எடுத்தாண்டு வாழ்ந்து போன இசையமைப்பாளர்கள் உண்டு, இன்று இசைஞானி இளையராஜாவின் திரையிசைப் பங்களிப்பு என்பது 80களில் கோலோச்சிய தனியதிகாரம் என்ற நிலை கடந்து இன்று மற்றைய இசையமைப்பாளர்களோடு பங்கு போட்டுப் பயணிக்கின்றது. இந்த நிலையில் அண்மைய இரண்டு வருடங்களாக சினிமாவில் ரீமிக்ஸ் வைரஸ் பரவியபோது ராஜாவின் முத்தான பழைய பாடல்களையும் அது […]

chat sms